Apr 9, 2014

இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலிருந்து... பகுதி 1


நூல் பெயர் : இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்


ஆசிரியர் : மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!

மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்களின் புகழ்பெற்ற நூற்களில் ஒன்றான ‘கிலாஃபத் வ முலூகிய்யத்’ எனும் நூலை தமிழில் ஹிந்துஸ்தான் பதிப்பகம் வெளியிட்டயர்கள்.

இஸ்லாமிய இறையாட்சி - கிலாஃபத் – என்றால் என்ன? எத்தகையதொரு ஆட்சி அமைப்பை இஸ்லாம் உருவாக்க நினைக்கிறது? எதற்காக உருவாக்க நினைக்கிறது? அவ்வமைப்பைக் கொண்டு இவ்வுலகில் என்ன சாதிக்க நினைக்கிறது? என்பன பற்றியெல்லாம் மௌலானா அவர்கள் இந்நூலில் அழகாக வர்ணித்துள்ளார்கள்.

அதுபோன்றே, உண்மையான இஸ்லாமிய இறையாட்சி - கிலாஃபத் எவ்வாறு இருக்க வேண்டும்? எத்தகையதொரு, எடுத்துக்காட்டான கிலாஃபத் ஆட்சியாக ஈமானில் முந்திக்கொண்ட சஹாபாப் பெருந்தகைகளின் ஆட்சி திகழ்ந்து? என்பதனை விளக்குவதோடு மட்டுமல்லாமல், கிலாஃபத், பிற்காலத்தில் எவ்வாறு மன்னராட்சியாக மாறிப்போனது என்பதனையும் மௌலானா விவரித்துள்ளார்கள்.


முன்னுரை

கிலாஃபத்தை பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் என்ன? முதலாம் நூற்றாண்டில் எந்தெந்த நியதிகளின் கீழ் அது செயல்பட்டது? என்னென்ன காரணக்களால் அது மன்னராட்சியாக மாறியது? அதனால் ஏற்பட்ட விளைவுகள் யாவை? அவ்விளைவுகளினால் உம்மத்தில் ஏற்பட்ட எதிர்த்தாக்கங்கள் என்னென்ன?

என்பன பற்றியெல்லாம் மௌலானா விவரித்துள்ளார்கள. இன்ஷா அல்லாஹ் இந்த நூலில் உள்ள ஒரு சில பகுதிகளை வரும் நாட்களில் இந்த இணையத்தளத்தில் தரக் இருக்கிறன்.

இஸ்லாமியச் சகோதரன்,

Islamicuprising.blogspot.com

( இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

No comments:

Post a Comment