Sep 7, 2016

சிரியாவில் குர்து மக்களுக்கு விமானம் மூலம் வான் பாதுகாப்பு

சிரியாவில் குர்து மக்களுக்கு விமானம் மூலம் வான் பாதுகாப்பை அமெரிக்கா வழங்குகிறது.
 
இஸ்லாம் மற்றும் முஸ்லிம் மகளுக்கு எதிராக சிரியாவில் நடந்துவரும் போரில் அமெரிக்கா தனது திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறது, ஏதாவது ஒரு வகையில் தனது அதிகார வரம்பை மீறி செயல்கள் போகும் பட்சத்தில் அமெரிக்கா தனது படையை உபயோகிக்க தயராகவுள்ளது. ( செய்தி – 19/8/2016  தி நியூயார்க் டைம்ஸ்)
 
குர்து போராளிகள் சிரியாவின் வடகிழக்கு பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், இவர்கள் அமெரிக்காவுடன் இனைந்து ISIS ஐ எதிர்த்துவருகிறார்கள். சிரியாவின் பஷார் அல் அசாத் அரசின் விமானம் குர்து போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை தாக்கியதை கண்டித்து அமெரிக்கா உடனடியாக தனது விமானத்தை அந்த நிலப்பரப்பின் மேல் பரக்க செய்து குர்துகள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பென்டகன் செய்தி தெரிவித்துள்ளது. சிரியாவின் பஷார் அரசுக்கும், குர்து போராளிகளுக்கும் இடையே அவ்வப்போது சில சிறிய மோதல்கள் நடந்துள்ளதே தவிர இவ்விருவருக்கும் இடையே பெரிய அளவிலான போர் நடைபெறாத நிலையில் இந்த விமான தாக்குதலை சிரியா அரசு குர்துகள் மேல் தொடுத்துள்ளது.
 
அமெரிக்கா இது போன்ற உதவிகளை சிரியாவில் உள்ள மற்ற எந்த போராட்ட குழூக்களுக்கும் வழங்கவில்லை, இஸ்லாமிய போராட்ட குழூக்கள் அமெரிக்காவின் செயல் திட்டங்களை ஏற்கமருப்பதாலும் இஸ்லாத்தைமையமாக வைத்து செயல்படுவதாலும் அந்த போராட்ட குழுக்களுக்கு எதிராகவே அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
 
 
செய்தி பார்வை 20.08.16

No comments:

Post a Comment